சோகம்
1,2ரிபீட்
1,2ரிபீட்
மனம் போராடி போராடி சோர்கின்றது
தினம் சோகத்தில் விடியல்கள் பிறகின்றது
மரம் பூக்காமல் காய்க்காமல் காய்கின்றது
ஏனிந்த இழிவான வாழ்வு
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ?
என் அகராத்தில் இன்பத்தின் எல்லைகள் கானல் நீரோ
முள்மீது பாதைகள் விரிகின்றது
சொல் எல்லாம் நெருப்பாக பாய்கின்றது
பொய்மை மனம் சுற்றி எனைத் தாக்குகின்றது
உண்மை அன்பைத்தேடி உள் நெஞ்சம் ஏங்குகின்றது
மலர் விரியாமல் மொட்டாக கருகுகின்றது
எண்ணம் கரடாக காய்ந்திங்கு வாடுகின்றது
எதற்கிந்த சோதனைகள்
என் உள்ளம்துகளாக உடைகின்றது
சோகம் தீண்டாத நாளில்லை
சுமை இறக்கத்தான் ஆள் இல்லை
தோல் கொடுக்கும் காலம் எனக்கு
துன்பம் தானே தாரை வார்க்குது
துணிந்திங்கு அடிவைத்தால்
கை கொடுக்கும் நட்புக் கூட தூரப்போகுது
ஊர்சுற்றும் சேவலிற்கு அடைக்கலம் உண்டு
உண்மையாக வாழும் மனிதர் சாபம் பெற்றவரோ?
துயரக்கடலில் நீந்திடத்தான் என்னை படைத்தனரோ
சோகம்தான் நிலை என்றால்
எதற்கிந்த வாழ்க்கை
எதைத்தேடி பயணங்கள் நடைபோடுமோ.
No comments:
Post a Comment