ஆண்: ஒருதுளி சிறுதுளி அந்த மழைத்துளி
கூந்தல் மலரில் விழுந்து
முதுகில் ஊர்ந்து உள்ளே நுழைந்ததடி
அதை பருகிட வந்தேன்
ஆடை சுவைத்ததடி...
சோலைத்தலைப்பு முடிய இருமுகிலை
விலக்கிக் காட்டியது வானவில்
பெற்றுப் போட்டதோ
சிற்றிடை மட்டும் அழகாய் தெரிந்து
அவஸ்த்தை கொண்டது என் மனசு
பெண்: என் கூந்தல் தழுவ உனக்கு மட்டும்
உரிமை தந்தேன் வாடா என் கள்வா
என் இதழின் லீலை
உனக்கு மட்டும் சாகசம் செய்யுமடா
மொத்தத்தில் முத்தத்தில் குளிபாட்டும்
என் வதனம் வாடா என் கள்வா
விரலின் நரம்புகள் நாயனமிசைக்கும்
நீ என் வீணையடா
வாடா என் கள்வா சுரங்கள் சுகமே
ஆண்: நீரோடை இசைபாட என் மேனியில்
புது புதுச் சேட்டைகள் செய்தபடி
இருந்தும் உன் தேகம் தீண்டும்
இன்பம் வேரு எதிலும் இல்லையடி
1-5 ரிபீட்
No comments:
Post a Comment