Wednesday 27 November 2013
காதல்!
உள்ளுணர்வு
இரண்டும் உணரும் போது
உண்டாவது காதல்!
உணர்ச்சிகளை
மட்டும் பாராமல்
உணர்வுகளையும்
மதித்து
வாழ்வதை
நெறிபிறழாமல்
வாழவைப்பது
காதல்!
மலர்களின்
மென்மையை
மெல்ல
உணரச்செய்து
முட்களின்
வேதனையை
சுவைக்கச்
செய்வது காதல்!
இன்ப துன்ப
வழிமுறையைப்
புரியச் செய்து
முழு மனிதர்களாய்
உருவெடுக்கச்
செய்வது காதல்!
இருவர் வாழ்வின்
கடைநொடி வரை
அன்பு உறங்காமல்
உதித்திருக்கும்
உள்ளத்தின் உன்னத
எண்ணமே காதல்!
ஒருநிமிடக்கதை
அவன் நல்லவன்
என்பதால்
இதயத்தில் இடம்
பிடித்தான்
அவன் வல்லவன்
என்றதால்
உயிரில்
கரைத்தேன்
ஆம் காதலின்
அரிச்சுவடு அது
சாதிதடை என்று
சாதித்தனர்
பெற்றோர்
சரிதான்..
காதலையும் துறக்க
முடியவில்லை
பாசத்தையும்
ஒதுக்க விலக்க முடியவில்லை
சூழ்நிலை
கைதிநான்
எவருக்கும்
வழியில்லாமல்
எனக்கு மட்டும்
வலியுடன் கூடியவழி..
பார்த்தேன்...
இன்று கன்னியாஸ்திரி
ஆகிவிட்டேன்.
செய்யாதே!
தீமை கண்டு அஞ்சாதே
தீவிரவாதம்
செய்யாதே
அடுத்தவரை வையாதே
அடம் புடிச்சு
துள்ளாதே
பிறர் பொருளை
எடுக்காதே
பொய்ய்யத்தானே
சொல்லாதே
தாத்தாவைத்தான்
திட்டாதே
பாட்டியைத்தான்
தள்ளாதே
கண்டத கடியத
திண்ணாதே
கண்டபடி பேசாதே
சதிகண்டு செல்லாதே
சத்தியத்தை மறவாதே
சந்தேகத்தை
வளர்க்காதே
சாதிக்குள்ள
போகாதே
ஆகாததை செய்யாதே
அவஸ்தைப் பட்டுத்
திரியாதே
இரக்கமுள்ளவர்
காந்தி
இரக்கமற்றவர்
கோட்சே
இருவருமே இந்த
மண்னின் மைந்தர்கள்
இவர்களைப் போல
இருப்பது
அரிது...
உண்மைக்கு
அழிவில்லை
உலகை அதுகாக்கும்
உயர்ந்தவர்
கொள்கை
நிலைத்து
நிற்கும்
உத்தமர் பாதை
வழிகாட்டும்
அஹிம்சை
ஆபத்தில்லை
ஆணவம்
சிறந்ததில்லை
சரித்திரம்
சொல்லும் பாடமிது
நல்லோர் சொல் என்றும்
வேதம் அது
பழத்தின் பயன்கள்
திராட்சைதான்
இதயத்துக்கு
பலம் சேர்க்கும்
ஒளிகூட்டும்
மாதுளம் பழம்தான்
வயிற்றுக்கு
நன்மை தரும்
நல்ல நல்ல
வாழைப்பழம்
குடலுக்கு உடலுக்கு
ஆரோக்கியம் நல்கும்
ஆப்பிள் பழம்
ஆயுளை
விருத்தி
செய்யும்
அன்னசியும்
தேடணும்
சப்போட்டா
சாப்பிடணும்
ஸ்டிராபெர்ரி
உண்ணனும்
கொய்யாப்பழம்
மலம் இளக்கும்
மாம்பழம் போஷாக்கு
பலாப்பழம்
பல்லுக்கு
உறுதி தரும்Tuesday 26 November 2013
காய்கறி!
கலர் கலராய் காய்கறி
பச்சை நிற வெள்ளரி
ஆரஞ்சு நிற காரட்டு
சிவப்பு நிற பீட்ரூட்
சாம்பல் நிற பூசனி
மஞ்சள் நிற தக்காளி
வகை வகையாய் கீரை
வாசலிலே வித்து வரும்
அம்மா கிட்ட சொல்லி
சமைச்சுதானே வாங்கி
நீயும் திண்ணனும்
தளதளன்னு உடம்பு
இருக்கும்
தங்கம் போல பளபளக்கும்
நித்தம் நீயும்
உண்ணனும்
பலசத்து கலந்திருக்கும்
ஒவ்வொறு காய்க்கும்
வெவ்வேறுருசியிருக்கும்
உடல் உறுதியோடு பலப்படும்
ஓடியாடி விளையாட
சோர்வை போக்கும்
காய்கறி
பாப்பா பழகு!
வாழ வாழ நீ பழகு
மெல்ல மெல்ல நீ பழகு
நல்ல வார்த்தை நீ
பேசிப் பழகு
தீமை கண்டு விரட்டப்பழகு
கெட்ட செயலை
விட்டுப்பழகு
சிறந்த கருத்தை
ஏற்கப்பழகு
கருணை காட்டி வாழப்பழகு
நாணலாக வளைய பழகு
பெரியவரை மதிக்கப்பழகு
இடம் அறிந்து
வெல்லப்பழகு
விளையாடிக்
களித்துப்பழகு
உடற் பயிற்சி செய்து
பழகு
அளவோடு உண்டு பழகு
ஆறு மணிக்கு படிக்க
பழகு
விடியும் பொழுது
செல்ல செல்ல குட்டி;
கரும்புச்
சக்கரக்கட்டி;
சோம்பி துவண்டு
சொக்காதே;
எரிச்சல்
பட்டுப்பார்க்காதே...
சும்மா தானே அழுகாதே
ப்ல்லை நீயும்
துலக்கும் போது
பற்பசையை திண்ணாதே!
குளியல் போடும் போது..
சோப்பைத் தானே
கரைக்காதே
கையை அசுத்தம் செய்யாதே
நகத்தை கடிச்சு சேட்டை
ஏதும் செய்யாதே
விடியும் பொழுது.
என் தோட்டம்
எனது பதிமூன்றாம் வயதில் எனக்குள் ஏதோ மாற்றம்
என் இனிய தோட்டம் தன்னை தனக்குள்
ஊடுருவச் செய்த அற்புதத் தோட்டம் அது...
கற்பனைக்கு தீனி தந்த திரவியம்
மனதிற்கு தினம் மகிழ்ச்சி அளித்த தோட்டம்
உள்ளீடாய் உள்வாங்கி உரிமையோடு ஏந்திய தோட்டம்
ஏதேதோ செய்தி சொல்லி எனக்கு பிடித்தபடி சலசலப்பை தந்து
பாதை தடத்தை புரியவைத்த என்னை கவிஞர் ஆக்கிய
எனது ஆருயிர் தோட்டம்
Subscribe to:
Posts (Atom)