Pages

Wednesday 27 November 2013

காதல்!
உள்ளுணர்வு இரண்டும் உணரும் போது
உண்டாவது காதல்!
உணர்ச்சிகளை மட்டும் பாராமல்
உணர்வுகளையும் மதித்து
வாழ்வதை நெறிபிறழாமல்
வாழவைப்பது காதல்!
மலர்களின் மென்மையை
மெல்ல உணரச்செய்து
முட்களின் வேதனையை
சுவைக்கச் செய்வது காதல்!
இன்ப துன்ப வழிமுறையைப்
புரியச் செய்து முழு மனிதர்களாய்
உருவெடுக்கச் செய்வது காதல்!
இருவர் வாழ்வின் கடைநொடி வரை
அன்பு உறங்காமல் உதித்திருக்கும்
உள்ளத்தின் உன்னத எண்ணமே காதல்!

No comments:

Post a Comment