Pages

Monday 18 November 2013

உன் சொத்து

தாயை துதி
தந்தையை மதி
ஆசானே கதி
உன்னை நீ சோதி
நேசப்பார்வைப் பார்
எதையும் எதிர்கொள்
வஞ்சகம் செய்யாதே
வன்முறை ஆகாது
உயர்ந்ததை வாதி
உணர்வாய் உலகநீதி
ஏதும் இல்லை விதி
தீமையை மிதி
பலமுறை சிந்தி
காலம் அறி
கடமையை செய்
மென்மையாய் இரு
மேதவியாய் திரியாதே
அடக்கம் கொள்
சுறுசுறுப்பாய் இயங்கு
இதுவே உன் சொத்து

No comments:

Post a Comment