ஒருநிமிடக்கதை
அவன் நல்லவன்
என்பதால்
இதயத்தில் இடம்
பிடித்தான்
அவன் வல்லவன்
என்றதால்
உயிரில்
கரைத்தேன்
ஆம் காதலின்
அரிச்சுவடு அது
சாதிதடை என்று
சாதித்தனர்
பெற்றோர்
சரிதான்..
காதலையும் துறக்க
முடியவில்லை
பாசத்தையும்
ஒதுக்க விலக்க முடியவில்லை
சூழ்நிலை
கைதிநான்
எவருக்கும்
வழியில்லாமல்
எனக்கு மட்டும்
வலியுடன் கூடியவழி..
பார்த்தேன்...
இன்று கன்னியாஸ்திரி
ஆகிவிட்டேன்.
No comments:
Post a Comment