என் தோட்டம்
எனது பதிமூன்றாம் வயதில் எனக்குள் ஏதோ மாற்றம்
என் இனிய தோட்டம் தன்னை தனக்குள்
ஊடுருவச் செய்த அற்புதத் தோட்டம் அது...
கற்பனைக்கு தீனி தந்த திரவியம்
மனதிற்கு தினம் மகிழ்ச்சி அளித்த தோட்டம்
உள்ளீடாய் உள்வாங்கி உரிமையோடு ஏந்திய தோட்டம்
ஏதேதோ செய்தி சொல்லி எனக்கு பிடித்தபடி சலசலப்பை தந்து
பாதை தடத்தை புரியவைத்த என்னை கவிஞர் ஆக்கிய
எனது ஆருயிர் தோட்டம்
No comments:
Post a Comment