கண்ணீரில் மை எடுத்து
கவி ஒன்றை நான் வடித்தேன்
காற்றோடு உறவாடி காகிதத்தை தேந்தெடுத்தேன்
மலரோடு நான்
பேசி கரு ஒன்றை தேர்ந்தெடுப்பேன்
நானும் சராசரியாக இருந்திருக்க கூடாத என ஏங்குகிறேன்
அஞ்சறைப் பெட்டி வரை என் அறிவு!
அடுப்படியே உலகமாய் இருந்திருந்தால்!
மனப் போராட்டம் இல்லை
சோர்ந்தேன் பலமுறை பிறரை சார்ந்தேன் சிலமுறை
எதுவுமே அமைதி தரவில்லை
எண்ணியதை எழுதி முடித்ததும் நான் நான் ஆனேன்.
No comments:
Post a Comment