Pages

Monday 18 November 2013

தாய்மை

அண்டவெளிக்கோளில் புவியே தாய்மையின் முன்னோடி
தரணியில் இனபெருக்கம் விரிகிறது சிரிக்கிறது மலர்கிறது
எனில் தாய்மையே ஆதாரம்...

அக்கினியிலும் தாய்மை காண்பீர்
ஆர்பரிக்கும் அலைகடலிலும் தாய்மை உண்டெனத்தெரிவீர்
ஆதலால் வழ்கிறது நீர் வாழ்வன...

வளைந்து, நெளிந்து, இணைந்து,இயங்கும் மீன் இனம்
மூச்சு விடுகிறது எனில் தாய்மைபரிவு அங்கும் உண்டு...
வாயு முலக்கூறிலிருந்து தொடர்ந்து ஐந்தறிவு ஜீவிதம் வரை...

தாய்மை பரிவு அங்கும் உண்டு எனில், ஆறறிவு படைத்த நாம்,
உயிரிகளின் மகத்துவம் அறிந்து
தாய்மை பரிவு காட்டி உலக ஜீவன்களிடமும்
சந்திக்கும் நம்வர்க்கத்துடணும் நேசமுடன் கைகோர்ப்போம்...

தாய்மை பொய்க்காது தரணி உள்ளவரை இயங்கும் இனிய விருச்சம்

                                                   கவிஞர்-RK

No comments:

Post a Comment