Pages

Sunday 29 July 2018

1990ஆம் ஆண்டு எழுதியது (பாடல் )கவி மழையை நான் பொழிய கலை மகளின் அருள் வேண்டி நான் பாடுவேன்.... அருள் மழையை நீ தர அழைக்கின்றேன்... அன்பின் உருவே வருவாயா? வையகத்தில் வாழுகின்ற! உயிர்களிற்கு அறிவென்ற. செல்வம் தந்து காப்பவள் நீயே.... வாழ்வென்னும் ஏட்டில் மனம்என்னும் வீட்டில் வந்து அருள் புரிவாயே ....1,2... சொல் என்ற அம்பெடுத்து செயுள் ஒன்றை உருவாக்குவேன்... தழில் மீது ஆணை என் தாய் மீது ஆணை அழியாத புவி மீதும் ஆணை .... கல்விக்கு அதிபதி நீயே! கடமைக்கு தலைவி வேள்விக்கு அருள்வாய் வெண்தாமரைப் பூவில் வாசம் செய்யும் சரஸ்வதிதேவீ... வீணையின் நாதத்தால் உலகாழ்கிறாய் எனக்குள்ளே போராட்டம் ஏன் வந்ததோ? எதற்கிந்த நாடகம் நீகூறு தாயே.... பாரோரின் அன்புக்கும் பண்புக்கும் உரித்தானவள்... பரிதவிக்கும் என் நெஞ்சை பார்ப்பாயே நீ... கற்பனை ஜாலத்தை ஏன் விதைத்தாய் பதில் கூறு.1to6.

No comments:

Post a Comment