ஏன்?
மானுட வதம் ஏன்?
மாறிடு மனிதா!
சிந்தனை நமக்கேன்?
எண்ணிடு மனிதா!
தீவினை குணம் ஏன்?
புரிந்துடு மனிதா!
போர் செய்யும் செயல் ஏன்?
வெறுத்திடு மனிதா!
கபட நாடகம் ஏன்?
களைந்திடு மனிதா!
எதிர்மறை வினை ஏன்?
துறந்திடு மனிதா!
கொள்ளை கொலை விளைவேன்?
ஒதிக்கிடு மனிதா!
தோல்வி நிலை ஏன்?
ஆராய்ந்திடு மனிதா!
வெற்றிக் களிப்பேன்?
தனித்திடு மனிதா!
சமநிலைதான் உயர்த்திடும்
மனிதா!
பாதகம் இனி ஏன்?
பகுதாய்ந்திடு மனிதா!
வன்முறை செயல் ஏன்?
வாழ்ந்திடு மனிதா!
No comments:
Post a Comment