தப்பு!
தப்பில்லாமல்
வாழ்வில்லை
தப்பித்தவறி வாழ்வதில்
அர்த்தமில்லை
பொய் இல்லாமல் உலக
மனிதர் இல்லை
பொய் பொய்யாய்
வாழ்வதில் நிம்மதியில்லை
தூங்காமல் நாட்கள்
இல்லை
தூங்கி தூங்கியே பொழுது
கழிவதில் பயன் இல்லை
பணம் இல்லாமல் பொருள்
இல்லை
பணம் பணமாய் பதைப்பதில்
சுகமில்லை
ஆடாமல் மனம் இல்லை
ஆட,ஆட மனம் தொல்லை
சொல்லாமல் சொல் இல்லை
சொல்லி, சொல்லி
கொள்வதில் பலன் இல்லை
No comments:
Post a Comment