நினைத்தால்!
மன்மத ராஜாக்களே
சிறூகுழந்தைகளை
உங்கள்
காமப்பசிக்கு
இரையாக்காதீர்கள்...
பெண்மை தழைக்கும்
நீங்கள் நினத்தால்!
போக்கிரிராஜாக்களே!
அடுத்தவர்
மனைவியை
திருடிப்புசிக்க
எண்ணாதீர்கள்
பண்பாடு
தழைக்கும் நீங்கள் நினைத்தால்!
தில்லுராஜாக்களே!
எவர் மகளையோ
ஏமாற்றி
ஆசை வார்த்தை
கூறி
பருவப்பசி
தணிக்காதீர்கள்
உறவு நேசம்
தழைக்கும் நீங்கள் நினைத்தால்!
அன்பு ராஜாக்களே!
முழுமை மனிதனாக
வாழும்
முயற்சியை
கைவிடாதீர்கள்
மனிதம் வாழும்
நீங்கள் நினைத்தால்!
No comments:
Post a Comment