நீ தீ குளிப்பதால்
பிரச்சனை தீர்ந்துவிடப்
போகிறதா...சகோதரா!
இருந்திங்கு நம் கடமை
எது என்று எண்ணிப்பார்
மொழிப்ப்ற்று
வேண்டும்தான்
இனப்பற்று தேவைதான்
அதற்கு உன் உயிர்
ஈடில்லை
நீ இருந்தால்தானே!
மொழி தழைக்கும் சகோதரா!
உன்னை இழந்து
நாங்கள் என்ன செய்வோம்
புத்தியைத் தீட்டு
காட்டுத்தீக்கு
இரையாகும்
குஞ்சு போல
கருகிமாழாதே!
பிரச்சனை வரும் போகும்
வீரமுள்ள நீ
மீண்டும் பிறப்பாயா?
No comments:
Post a Comment