Pages

Thursday 26 December 2013

கண் விழித்து பார்த்தேன்
காழை கண்விழித்துப் பார்த்தேன்
சோலை சிரிக்கும் சப்தம் கேட்டேன்
தண்ணீரில் என்பிம்பம்
தகதகக்கும் ஒர் அழகு

அதிகாலைச் சூரியனின்
எழில் கோலம் என்னைக் கொஞ்சம் வருடி
கருவிழியில் சிறு மணியில்
ஆயிரம் மாயை ஜொலிக்கிறதே!

புல்லின் மீது பனிநீர்
படுத்துறங்கும் அழகை
மலர்கள் கூட்டம் என்னை
வாழ்த்துப்பாடும் ஓசை
தென்றல் கீற்று தேகம் தொட்டு
பார்க்கும் சுகந்தம்

வாய்க்கால் வரப்பில் வண்டினங்கள்
கூத்துப்போடக் கண்டேன்
விடியல் பார்த்த பறவை
சிறகை விரித்துப்போன அழகை
நேற்றுப் படர்ந்த துன்பம்
இன்று விலகிப் போனதெங்கே
புத்துணர்ச்சி பெற்றேன்

பூவில் நூறு வாசம் நூகர்த்தேன்
புதிதாய் பிறந்து வந்து நின்றேன்
புன்னகை சேர்ந்து வந்து உதிர்த்தேன்.

No comments:

Post a Comment