Pages

Wednesday 18 December 2013

விடியல் என்றோ?
கடமை ஆற்றுமோடி;
அடி நெஞ்சக்கூவல்
கவிதை அடங்குமோடி
உள்நெஞ்சக்கூற்று
காலத்தை வெல்லும் கவிக்குழந்தை
என்று மூப்பெய்தாமல்....
நான் தரித்த உயிர்க்குழந்தை
மூப்பெய்தி போனாலும்
அகிலம் உள்ள மட்டும்
கவிதை பூப்பெய்தும்
கடமை உள்ளழவு
வாழ்வென்னும் அச்சு முறியாது
தூங்காம்ல் விழித்திருக்கும்
தூரத்து விண்மீன் போலே
எனது உயிர் கவிதைகள்
காலத்தை வென்று
நடைபோடும் “ஒர்” நாளில்.

No comments:

Post a Comment