இருட்டறைக்குள் அரண்டுவிடுமோ?
என ஏங்கிக் கொண்டிருந்தேன்
உயிர் கொடுத்து உரம்தந்து
பத்திரிக்கையில் உலா வந்த காட்சி
குஞ்சும் கோழியும் கூடி மகிழும்
காட்சியாக இருந்தது;
என் படைப்புக்கள் ஓரம் கட்டப்படுமோ?
என்று நினைத்தேன்
ஒய்யாரமாய் என் கவிப்பிள்ளைகள்
நடைபோடும் பதிவு கண்டு
என் இதய நாளங்கள் நங்கூரம் பாய்ச்சியது.
No comments:
Post a Comment