Pages

Wednesday 18 December 2013

கற்பனைக்கு கண்மை தீட்டி
கண்டு ரசித்தேன்...
உண்மைக்கு உரிமை கீதம்
உரித்தாய் வாசித்தேன்
கோடியாய் கொடுத்தாலும்
கேடு விளையும் பாதையை
விரும்பவில்லை...
எங்கும் படர்ந்திருக்கும்
கற்றை நேசித்தேன்
வார்த்தையை வசப்படுத்தி
சிந்தனை என்னும் சீரிய
உளி எடுத்து சொற்களை செதுக்கினேன்
தனியே தவமிருந்து
இனிய தமிழ் கவிதைகள்
பலநூறு ஈன்றெடுத்தேன்.

No comments:

Post a Comment