Pages

Wednesday 11 December 2013

பெற்றவர் சாபத்தில்
இணைவது காதல் என்றால்
அது நமக்கு வேண்டாம்
அவர்கள் அறியாமையில்
மறுக்கலாம் மருகலாம்
நாம் அறிவு விசாலப்பட்டவர்கள்
பிரிவென்று வந்தபின்னே
பிரிந்துவிடலாம்
எக்கவலையும் காலம் மாற்றும்
வயதின் பருவமாற்ற நிகழ்வு
“அது”என விட்டுவிடுவோம்
எத்தனை  தியாகம்
செய்து தன் தேவையை குறைத்து
நம் தேவையை கூட்டி
உயிர்காத்த உறவுகளுக்காக
உள்ளிருந்து விடுப்பட்டு
வாழ்வு போகும் வழிகடந்து
புதிய இணையுடன் இணைவோம்.

No comments:

Post a Comment