Pages

Wednesday 18 December 2013


விதவைச் சடங்கு!
சூடிவிட்டு அழிக்கும் சூறையாடல்
உணர்வை காயப்படுத்தும் அத்துமீறல்
இதயத்தை ரணமாக்கும் வன்முறைச் செயல்
ஒதுக்கி வைக்கும் தீண்டாமைச் செயல்
உணர்ச்சிப் போரிடல் ஒருபுறம்
இகழ்ச்சி பேரிடர் மறுபுறம்
பெண்ணிற்க்கு பெண்ணே எதிரி
இது ஒரு சாட்சி
ஆண்கள் துணை இழந்தால் என்ன பெயர்
இவ் இழி செயலிற்கு விடிவு எப்போது
வேடிக்கைப் பொருளாய் உணர்வு
உயிர்நிலை ஆக்குவது
தடை செய்யப்பட வேண்டும்.
விதவை என்ற சொல் நீங்க வேண்டும்
வேதனைப் படுத்தும் பதம் எதற்கு?
சக மனுசி....
நிமிர்ந்து வாழ்வார்கள் நிம்மதியாக.

No comments:

Post a Comment