பாடல்:-வானவில்!
மழைக்காலம் வரும்பாரு
மேகத்தையே நீயும் பாரு
வானவில்லில் வர்ணம்பாரு
ஏழு நிற வகையைப்பாரு
தொடுத்ததுதான் யாருபாரு
இயற்கை அன்னை அவளைப்பாரு
காலையிலும் வரும்பாரு
மாலையிலும் வரும்பாரு
மனசை மயக்கும் அழகு பாரு
மாடியில நின்னுபாரு
அம்மாகிட்ட கேட்டுப்பாரு
காரணந்தான் ஏது கேளு.
No comments:
Post a Comment