வேகம்
புயலை எதிர்த்து நின்றிடுவேன்
புத்துயிர் பெற்று
வாழ்ந்திடுவேன்
புனிதம் உயர்வாய் காத்திடுவேன்
கடமை ஆற்றக் கண்ணாக
காரியம் ஆற்ற உறுதி கொள்வேன்
கவலை எனக்கில்லை போடாபோ
கண்ணீர் வற்றிய விழியதுவே
கொல்லன் பட்டறை உளி இதுவே
தனிமை எனக்கென்றும் புதிதல்ல
தவிப்பும் எனக்கொரு துடிப்பல்ல
பலமுறை கண்டேன்
பலமுறை கன்டேன் காயங்களை
அக்கினிச் சிறகுகள் உள்நின்று
பாறை இதயம் இதுவாச்சு
பயணம் இனியும் தெளிவாகும்
தேடல்கள் அதிலே துணையாகும்
இருக்கும் வரையிலும்
வாழ்ந்திடுவேன்
எதிர்த்து நின்றால் எதுவும்
தூசாகும்
எண்ணம்
உயர்ந்தால் எதுவும் வசமாகும்
No comments:
Post a Comment