Pages

Monday 2 December 2013

      நாய்!
மூடிவைத்தேன் ஓசைகளை
முடக்கிவைத்தேன் ஆசைகளை
எடுத்தெறிந்தேன் எண்ணங்களை
காலடி சுற்றும் வளர்ந்த நாய் அது
மீண்டும் வந்து தொலைக்கிறது
வெகுதூரம் கொண்டு சென்று
விட்டு வந்தேன்...(எண்ணம்)
அப்பாடா!
என நிம்மதி பெருமூச்சுவிட
நினைத்த பொழுது
மோப்பம்  பிடித்து மீண்டும் வந்தது
வளர்ந்த வளர்த்த நாய் அது!
நாதி தேடி வருகிறதோ?

No comments:

Post a Comment