Pages

Wednesday 18 December 2013

தவறே செய்யாமல் மனிதன் இருக்கமுடியாது
பொய்யே சொல்லாமல் மனிதன் இயங்கமுடியாது
தப்பை தப்பித் தப்பித் தப்பாய்
செய்வதுதான் தவறு...
பிறருக்கு தண்டனையாய்
போகாதவரை தவறல்ல...
மாது சுகம் தான்
நம் பணம் கரையாதவரை!
மது இனிது தான்
அதற்கு அடிமையாகாதவரை
ஊது குழல் ஒருபோதைதான்
உயிருக்குப் பாதகம் வராதவரை..
எல்லைக்கோடு வகுத்து
எல்லைத்தான்டத வரை
எல்லாத் தவறும் மாற்றக்கூடியதுதான்
நல்ல செயலோ கெட்ட செயலோ
அதற்கு அடிமையாகாதவரை
வாழ்க்கை கரைகடந்து பயணிக்கும்.

No comments:

Post a Comment