Pages

Wednesday 11 December 2013

எங்கே நிம்மதி?
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் இதயத்தில் தான்
உள்ளது என்றார்;
எங்கே மரணம்!
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் உடலில் தான்
உள்ளது என்றார்;
எங்கே பணம்!
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் உழைப்பில்
உள்ளது என்றார்;
எங்கே அதிஷ்டம்!
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் முயற்சியில் என்றார்;
எங்கே வசந்தம்!
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் சொல்லில் என்றார்;
எங்கே வாழ்வு!
எனக்கேட்டேன் இறைவனிடம்
உன் வழித்தடத்தில் என்றார்.

No comments:

Post a Comment