எங்கே நிம்மதி?
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன் இதயத்தில்
தான்
உள்ளது என்றார்;
எங்கே மரணம்!
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன் உடலில் தான்
உள்ளது என்றார்;
எங்கே பணம்!
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன் உழைப்பில்
உள்ளது என்றார்;
எங்கே அதிஷ்டம்!
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன் முயற்சியில்
என்றார்;
எங்கே வசந்தம்!
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன் சொல்லில்
என்றார்;
எங்கே வாழ்வு!
எனக்கேட்டேன்
இறைவனிடம்
உன்
வழித்தடத்தில் என்றார்.
No comments:
Post a Comment