Pages

Thursday 12 December 2013

வாசம்!
பக்கத்தில கூவம் ஆறு
எட்டத்தில ஏ வீடு
கீத்துக் கொட்டகை என் வாசம்
ஆரம்பத்தில் கூவும் ஆறு
முகம் சுளிக்க வைத்தது
போகப் போகப் பழகிப்போனது...
பத்து வருடம் கழித்து
அரசு வந்து தன் இடம் என
எடுத்துக்கொண்டது
ஏழைகளிற்கு இடம் ஒதுக்கி
நந்தவனப்பக்கம் வீடு கொடுத்தது
வாழுமாறு! இடமாறினோம்
நாங்களும் நல்லாத்தான் இருக்கோம்
ஆனால் அந்த கூவ நதி
“வாசம்” மட்டும் மனதில் மருகிக்கிடக்கிறது

No comments:

Post a Comment