இரவு உணவு!
ஒரு “கை” மாவு இருந்தது
தோசைக் கல்லை
வைத்து தோசை
வார்த்துக்கொண்டிருக்கும்
போதே
மனசு
கிளர்ந்தது...
ஓ! இன்று
பெளர்ணமி அல்லவா?
மாடிக்கு ஓடினேன்
நிலவை ரசித்தேன்
ஒரு முத்தமும்
தந்தேன்
ஏற்றுக் கொண்டதோ?
இல்லையோ?
தெரியவில்லை...
பின் கீழ் இறங்கி
வந்தேன்
என் இரவு உணவு
கரியானது
அன்று இரவு நான்
பட்டினி
என்ன? என்
எண்ணத்திற்கு
தீனி கிடைத்தது.
No comments:
Post a Comment