காட்டை அழித்து
காற்றை தேடுகிறோம்
சுற்றுபுறம் அசுத்தம் செய்து
சுத்தம் பார்க்கிறோம்
பிறநாகரீகம் கற்று
நம் பண்பாடு பேசுகிறோம்
பொய்மை வைத்து
தியானம் செய்கிறோம்
வஞ்சத்தில் மூழ்கி
அன்பைப் பொழிகிறோம்
கண்டபடி உண்டு
நோய்க்குற்றம் காண்கிறோம்
தீவிரவாதம் செய்து
அமைதிப் பூபாளம் பாடுகிறோம்
மனப்பகை வைத்து
உறவு கொள்கிறோம்
பல ஏட்டைப் படித்தும்
ஏதோ வாழ்கிறோம்!
No comments:
Post a Comment