Pages

Thursday 12 December 2013

அவசரப்படாதே!
முகத்தின் அழகை நீ! ரசித்தாய்
பருக்கள் எல்லாம் முத்துக்கள் என்றாய்
முகத்தில் உள்ள ரோமம்கூட
சில கிறுக்குக் கவிதைகள் என்றாய்
நிறம் பார்த்து வரவில்லை காதல்
அகம் பார்த்து ஓடி வந்தேன் என்றாய்...
நீயோ ஒரு கார்மேகம்
உனது விழி கூர்வாள்
எத்துப்பல்,தொத்துப்பல்
எடுப்பானது எனக்கு
அது பிடித்திருக்கிறது என்றாய்
உனது வதனம் பூந்திவளை
குண்டு உடல் கட்டுடல்
குள்ளத்திற்கு வயது தடையில்லை
ஆதலால் நீதான் முழு நிலவு என்றாய்
எனதுகுட்டைசடை
குரோட்டன் செடி என்றாய்
இவையெல்லாம் உண்மையா
பொய்யா மறுமுறை ஆய்வு செய்

No comments:

Post a Comment