Pages

Thursday 26 December 2013

அணைப்பட்டி ஆஞ்சநேயா!
எங்கள் அணைப்பட்டி ஆஞ்சநேயா!
மக்கள் குறையை நீ தீர்ப்பாய்
எங்கள் மன குறையை நீ தீர்ப்பாய்
பரந்த வானம் போல பூமிகாஞ்சு கெடக்குது
ஆத்துப்படுக மணலை எல்லாம் காத்துல வருது
காத்திருந்தோம், காத்திருந்தோம்
வர்ணனிற்காக

அந்த மழை தேவனை
அந்த மழை தேவனை அழைத்துவாயா ஆஞ்சநேயா!
தண்ணீருக்குக்காக உயிரினமும் வாடிவதங்குது
புல் பூண்டு எல்லாமே காஞ்சு கெடக்குது
எங்கள் தாகத்தை தீர்த்துவிடு ஆஞ்சநேயா!
மக்கள் பஞ்சத்தை போக்கிவிடு ஆஞ்சநேயா!
பஞ்ச பாண்டவர் வந்து தாங்கிய வனமல்லவா!
ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்தவரும் பீம்னல்லவா!
சக்க்தியுள்ள தெய்வம் எங்கள் ஆஞ்சநேயா!

மகாலிங்க மலையோனே!
மக்கள் குறைநீ தீர்ப்பாய்
முவ்வாறு சேர்கின்ற இடமல்லவா!
முக்கூடலில் முத்தான உள்பாதம்
பற்றுகின்ற பக்தர்ல்லவா!
நாவல்பழ தல விருட்ச நாயகனே!
எங்கள் நம்பிக்கை வீண்போகா
அருள் செய்வாய்.

No comments:

Post a Comment