Pages

Thursday 26 December 2013

பாடல்
சிந்தனை பறவை சிறகை விரித்தது
சிறிதாய் சிறிதாய் கலந்து விரிந்தது
உயர உயர பறக்கத் துடிக்கிறதே....
வானம் தொட்டு விட்டு
வந்து அமர்கிறதே...

கடலை தொட்டுவிட்டு தாண்டிப்போகிறதே....
மலையில் பயணித்து  மலரின் வாசம் நுகர்கிறதே...
வலையில் சிக்கிவிட்டு வந்து சோர்கிறதே...
மழையில் நனைந்திட்டு மலர்ச்சி கொள்கிறதே...
தரை தொட்டு ஊர்ந்து
தலைகளை கணித்து இதமாய் காற்றை
கையில் பிடித்து வந்து எழுதச் சொல்லி
என்னை நிந்தித்ததே....

சந்தித்த தருணம் தடங்களை மனதில்
பதிய வைத்து பதியமிடச் செய்கிறதே...
சிந்தனை பறவை சிறகை விரித்தது
சிறிதாய் சிறிதாய் கலந்து விரிந்தது
நவரச உணர்வை ரசித்துப் படித்துவிட்டு
ருசித்து கூடுவந்து அமர்கிறதே....
பக்கத்தில் வந்து கவிதை கதைபேசி
கருவை உயிர் பெறச்செய்கிறதே...

No comments:

Post a Comment