சரிதானா?
கைபேசி பேச்சில்
முறையற்ற
கதைகேட்டு தொலைத்துவிடாதீர்கள்
சில
பூக்கத்துடிக்கும் புதுமலர்களே!
வரவுக்கு மீரிய
செலவில்
வாழ்வின்
வசந்தத்தை
இழந்துவிடாதீர்கள்
சில இல்லறத்து
இனிய தோழிகளே!
சீரியலில் மூழ்கி
மனநோய்க்கு ஆளாகி
குடும்பத்தை
கவனிக்க மறவாதீர்கள்
சில உயரிய
தாய்மார்களே!
வீதீமுக்கில்
அமர்ந்து
புறணிபேசாதீர்கள்
பெருமைக்குரிய
சில
ஆச்சிமார்களே!
No comments:
Post a Comment