Pages

Wednesday 18 December 2013

வயிறு முட்டக் குடித்துவிட்டு
மண்ணில் புரண்டெழுந்தான்
கட்டியவன்...
மானமென்று ஏதுமில்லை
மரியாதை என்று யாதுமில்லை
வறுமை அருகில் வர
வளமை வற்றிவிட...
இடைப்பட்ட வருடம்
அப்படியும் இப்படியுமாய்
இம்சையில் உருண்டோடின
காலங்கள்...
ஐந்து வயதில் பையன்
இரண்டு வயதில் மகள்
காலனை கட்டியனைத்து
முத்தமிட்டான் கட்டியவன்....
வயிற்றுப்பிழைப்புத்தேடி
பயணித்தாள் அவள்
இரண்டு பிஞ்சுகளை
வளர்க்கவே வாழ்கிறோம்
என்ற பொருப்புணர்வோடு.

No comments:

Post a Comment