தாய்மார்களே!
அவர்கள்
வளர்ந்தபிள்ளைகள்
உங்கள்
பார்வைக்கு சிறுபிள்ளைகள்
உணவெடுத்து
ஊட்டாதீர்கள்
உணவு உண்ணக்
கற்றுக்கொடுங்கள்
பள்ளிச்சீருடை
அவசரப்பட்டு
மாட்டாதீர்கள்
அதை உடுக்க
கற்றுக்கொடுங்கள்
சிதறிக்கிடக்கும்
புத்தகங்க்களை
பதைபதைத்து
பையில்
திணிக்காதீர்கள்
பாங்காய்
எடுத்துவைக்க
கற்றுக்
கொடுங்கள்
அக்கறை என்று
எண்ணி
அன்பு இம்சை
செய்யாதீர்கள்
சுதந்திரம் என்று
எண்ணி
கட்டுப்படுத்தாமலும்
இருக்காதீர்கள்
அவர்கள்
இயந்திரம் அல்ல..
அடித்து துவைத்து
மற்றாதீர்கள்
அவர்கள் துணிகள்
அல்ல...
குட்டி குட்டி
புகட்டாதீர்கள் பாடங்களை
அவர்கள்
இடிதாங்கிகள் அல்ல...
அனைத்து அனைத்து
பாதுகாக்காதீர்கள்
அவர்கள் அவசரயுகத்தில்
நடைபோடவேண்டும்.
No comments:
Post a Comment